Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கந்தன் கருணை

 ஏதோ பொழுதை போக்க செய்வதறியாது வலைதளங்களில் உலாவிக் கொண்டிருந்தேன் அப்படியே யூடியூப் பக்கம் வர எதேர்ச்சையாக “கந்த புராணம்” காணொளி கண்ணில் பட்டது.

மனதில் உள்ளிருந்து ஓர் இனம் புரியாத ஈர்ப்பு கந்த புராணத்தை கேட்க துவங்கினேன், கேட்க கேட்க ஒரு வித ஆனந்தம் முருக பெருமானின் அறிவார்ந்த விகையாட்டு தந்தைக்கும் பாடம் புகட்டிய கதை, கந்த பெருமானின் படைத்தளபதியாக வீரபாகு என்று பல சுவாரஸ்யங்கள் மனதை வசீகரிக்க நான்கு நாட்களாக தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு ஒரு வழியாக சூர சம்காரம் நடந்த பதிவு மட்டும் கேட்க முடியாமல் இருந்தது.


நண்பர் ஒருவர் அவருடைய விடுமுறைக்கு இந்தியா செல்ல அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்றிருந்தேன். வாகனம் இரண்டு மூன்று தினங்களாக டிரைவர் சரியாக ஓட்டினாலும் யாராவது குறுக்கே வருவது என்பதாக இருக்க நான் டிரைவரிடம் கூறியிருந்தேன், ஏதாவது கோவிலுக்கு போய்ட்டு வா நீ சும்மா போனாலும் யாராவது வந்து இடையூறு செய்றான் என்று. அவரும் சிரித்துக் கொண்டே ஆமா நேரம் சரியில்லை போல என்றார்.


ஏர்போர்ட் செல்லும் பாதையில் தீடீரென வாகனத்தை நிறுத்தினார். என்ன என்று கேட்க அண்ணா இது முருகர் கோவில் போய்ட்டு வரீங்களா என்றான்! 


நீ வரவில்லையா என்ற என் கேள்விக்கு சிரித்துக் கொண்டே இல்லை என்று தலையை மட்டும் அசைத்தான்.


நான் உள்ளே செல்ல கோவில் முகப்பே பிரமாண்டமாக இருந்தது நுழைவு வாயிலில் பிரமாண்டமாக அமைந்திருந்தது சிவபெருமான் சிலை. இப்படி கோவில் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. தேர் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் என்பதை தேர் அறையை வைத்து கற்பனை செய்ய முடிந்தது.


பதினெட்டு சித்தர்கள் சூல முருக பெருமான் வள்ளி, தேவானையுடன் குமரனாக காட்சி அளித்தார் என்னுடல் சிலிரிக்க முருகா என்று சரணடைந்தேன். 


நானாக தேடி போகவில்லை முருகப்பெருமான் என்னை அழைத்து அரவணைப்பதாகவே உணர்வு பெருகியிருந்தது. இறைவனின் கருணை வார்த்தைகளில் கூறிவிட முடியாது.


இது போல பல முறை இறைவனால் ஆட்கொள்ள பட்டிருக்கிறேன். முருக பெருமானின் அருள் இது போல பலமுறை கிடைத்துள்ளது.


இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கோவில் நடையுள் முதலடி எடுத்து வைக்கவும் உச்சி கால பூஜைக்கு இசை மற்றும் மேளம் துவங்கப்பட்டது. முருக பெருமானின் அருள் மழையில் நனைந்து கருணை கடலில் மூழ்கி சாகா வரம் பெற்றேன் என்று எண்ணுகிறேன். 


அனைத்தும் எனக்காக நடப்பது போலவே இருந்தது. பூஜை முடியும் வரை முருகனை ரசித்துக் கொண்டே இருந்தேன். 


எனக்கு முருகனிடம் எந்த பிராத்தனையும் இல்லை, அன்று நடந்த நிகழ்வின் பிரமாண்டத்தில் இருந்தே என்னால் வெளி வரமுடியவில்லை.


ஓம் சரவணபவ! 


பல தத்துவங்கள் பலர் கூற எந்த தத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு நம்மை நாம் குழப்பிக் கொண்டிருப்பது வீண், புராணங்கள் கூறிய கடவுளாகவே அனைவரையும் ஆத்மார்த்தமாகா வணங்கி அருள் பெறுவோம் வீண் ஆராய்ச்சி தேவையற்ற சித்த விரத்தியை உருவாக்கும்.


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...