Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கருவாட்டு குழம்பு பிரியாணி

 பிரியாணி வேண்டும் என்று அவள் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள், நாளை வாங்கி தருகிறேன் என்று அவளை சமாதானப்படுத்தி, சமாதானப்படுத்தி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.


கையில் பணம் இல்லாமல் இல்லை, இருந்தும் தற்போதைய நிகழ்வுகள் ஒரு பிரியாணியை தள்ளிப் போட்டுக் கொண்டே போனது. சில சமயங்களில் பிரியாணி இன்று வாங்கி வருகிறேன் என்றாலும், அவள் இல்லை வீட்டில் சாதம் நிறைய இருக்கு இன்னொரு நாள் பார்க்கலாம் என்று அவளே அவளை சமாதானம் செய்து கொள்கிறாள். 

இன்று எப்படியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும்மென்று வீடு வந்து பார்த்தான், கருவாட்டு குழம்பு மணம் கம, கம வென்று வீடெங்கும் வீசியது.

சரி பரவாயில்லை வாங்கி கொடுப்பது என்றாயிற்று வாங்கி விடுவோம் என்று கடைக்கு கிளம்ப நான் கருவாட்டு குழம்பு வைத்து வயிறு புள்ளா சாப்டாச்சி என்று அவள் கூற…

சரி பரவாயில்லை ரொம்ப நாளா வாங்கி தர முடியாம போய்ட்டு இருக்கு இன்னைக்கு எனக்கும் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு நான் போய் வாங்கிட்டு வாறேன் நீ கொஞ்சம் நேரம் கழிச்சி பசிக்கும் போது சாப்பிடு என்றவனாய் கடைக்கு சென்றான்.

பிரியாணிக்கென்றே பிரத்யோக கடை இருக்க அந்த கடையும் ஞாயிறு விடுமுறையாம்;

எந்த நாட்களில் வியாபாரம் அதிகமாக நடக்குமோ அன்று புத்திசாலி தனமாக விடுமுறை என்று கிளம்பி விடுவார்கள் போல சோம்பேறிகள் என்று முனங்கியவனாய் அடுத்த கடை நோக்கி நகர்ந்தான்.

அங்கு பிரியாணி என்று மட்டுமே ஒரு பதாகை தென்பட்டது, ஆனால் அந்த கடையில் காலை பரோட்டா,தோசை, இட்லி மற்றும் மதியம் பிரியாணி பரோட்டா. இரவு வேளைகளில் காலையை போலவே இங்கு மாஸ்டர் முஸ்லீம் வேறு, சரி அப்படியாக பிரியாணி வெகு விமர்சையாக இருக்கும் என்று எண்ணி அண்ணா… ஒரு பார்சல் பிரியாணி எவ்வளவு என்று கேட்க 130௹ என்றார் கடை முதலாளி…

130௹ என்றதும் அவன் நினைவு “ம்ம்…பிரியாணி சூப்பரா இருக்கும் போல எல்லா கடையிலும் 100௹ தான் இங்கு 30௹ அதிகமாக இருப்பது போலவே சுவையும் அதி பயங்கரமாய் இருக்கும்” என எண்ணி அண்ணா இரண்டு பார்சல் பிரியாணி கொடுங்க என்று வீட்டிற்கு வாங்கி வந்தான்.

அவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். சரி நாம் சாப்பிடலாம் என்று அவன் பொட்டணத்தை திறந்து பார்த்தான் பிரியாணி வெள்ளை நிறத்தில் இருந்தது.

கடைகாரன் நெய் சாதம் சமைத்து அதில் ஒரு சிக்கன் பீசும் முட்டையும் வைத்து பிரியாணிஎன்று அவனும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றி வந்துள்ளான் என்பது தெரிந்து கோபம் கொண்டவன், சரி பொட்டணம் கட்டி கொடுத்த கிரேவியை ஊற்றிப் பார்க்கலாம் அது சுவையாக இருக்கும் என்று எண்ணி கொடுக்கப் பட்ட கிரேவி ஊற்றி சாப்பிட்டால் அது இன்னமும் மோசம் சரி அவள் ஆசை பட்டு கேட்டாள், இன்று வேண்டாமென்று கூறிய பின்னும் வாங்கி வந்தது நம் குத்தம் தான் என்று பிரியாணியை என்ற புனைப் பெயர் கொண்ட அந்த நெய்  சாதத்தை தூக்கி வீசலாம் என்று நினைத்த போது லேசாய் கருவாட்டு குழம்பு வாசம் வீசியது.

அவன் கருவாட்டுகுழம்பை ஊற்றி நன்றாக பிசைந்து தின்றான் அதன் சுவை ஆ…ஹா… பிரியாணி என்ன பெரிய பிரியாணி என்று தோன்ற செய்தது.

அன்று அவனுக்கு கிடைத்த பாடம் இனி பிரியாணி வேண்டுமென்றால் வீட்டில்ஒரு நாள் சமைத்து விட வேண்டும் ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று…..


அதுவும் ஒரு வகையில் உண்மை தான் அல்லவா!

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...