Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சர்பத் ஒரு அவமான பானம்

 முந்தைய நாள் மச்சானுடன் அடித்திருந்த ரம் காலை சிறிது மந்த நிலையில் மூளையை வைத்திருக்க, குமார் செய்வதறியாது வீட்டில் முன் வாசலுக்கு, பின் வாசலுக்கு நடந்துக்கொண்டிருந்தான் வீட்டின் பின் புறம் சிதறி கிடந்த கற்கள் “சரம்பல் கற்கள்” காலில் குத்துவதாக குமாரின் மனைவி கூற, ஏற்கனவே கிறக்கத்தில் இருந்தவனுக்கு ஒரு யோசனை.


பின்புறம் நடைபாதை போன்ற வடிவமைப்பில் ‘கூழாங் கற்களை’ பதித்து வைத்தால் கால்களுக்கு இதமாகவும், அக்கு பஞ்சர் போல குதி கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூட்டு வலி நிவாரணியாக செயல் படும் என்று பத்திரிக்கை ஒன்றில் படித்த நினைவு. அவன்  அந்த யோஜனையை மனைவியிடம் கூற அவள் சரி என்றி இழுத்துக்கொண்டே கேட்க நல்லா தான் இருக்கு! யாரு பண்ணுறது ? கல்லு வாங்க எவ்வளவு காசு ஆகும்னு ஏதாவது விசாரிங்க என்றாள்.

குமார் சற்று அவன் புத்திசாலி தனத்தை மனைவியிடம் நிரூபிக்க விரும்பியவனாய் அதுக்கு எதுக்கு காசு! இப்படியே கொஞ்சம் தூரம் போனால் மலை தான் ஓடைகளில் சும்மாவே கிடக்கும் அதை போய் இரண்டு சாக்கு அள்ளி போட்டால் போதும் என்றவனாய், எப்படி ஐடியா என்று மனைவியின் பின் சென்று அவளை வயிற்றோடு கட்டி பிடித்தான்.

சிறிது வெட்கம் கொண்டவள் அவனிடம் அதை மறைத்து சரி மச, மசன்னு நிக்காம போய்ட்டு வந்துருங்க சீக்கிரமா, சாப்டாம என்னால ரொம்ப நேரம் எல்லாம் இருக்க முடியாது என்றாள்.

அவனும் இல்லடி பட்டு இப்போ வந்துருவேன் என்று அவனுக்கு தெரிந்த நண்பர்கள் நாலைந்து போருக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து கூழாங் கற்கள் எங்க கிடைக்கும் டா என்று விசாரிக்க…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடம் கூறினார்கள். ஆனால் குமாருக்கு இடம் சரியாகா நினைவு இல்லை ஆனால் எங்கோ ஓரிடத்தில் ஓடையில் கும்பலாகா பார்த்த நினைவு. சரி என்று அவனது தம்பி ஒருவனை அழைத்துக் கொண்டு அவனது பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

செல்லும் பாதையில் அவனது ஊரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அந்த ஊர் பெயர் ‘குருந்தன்மேடு’ என்ற ஊர் நண்பர்களோடு அடிக்கடி அங்கு செல்வது வழக்கம்.

பேக்கரி, மெடிக்கல், மலரகம் என அத்தியாவசிய தேவையான பொருட்கள் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும்.

அங்கு ஆற்று பாலம் ஒன்றை கடந்து நூறு மீட்டரில் வலது புறம் கட்டிட வேலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாடகைக்கு கொடுக்கப் படும் கடை ஒன்று பரிட்சியமானது குமாருக்கு, கடையை கடந்து செல்ல அவரை பார்த்து லேசானா புன்னகை இருவரும் ஆண்டுகள் கடந்தாலும் பேசாவிட்டாலும் பல நாட்களுக்கு பின்பான சந்திப்பு புன்னகை மூலமே மீட்டெடுக்கப் படுகிறது.

கட்டிட வேலைகளுக்கு உபகரணங்கள் வாடகைக்கு கொடுக்கும் கடைக்கு எதிர் புறம் ஒரு “இசக்கியம்மன் கோவில்” கடந்து செல்லும் ஹிந்துக்குக்கள் அனைவரும் மனதிலோ அல்லது சில செய்கைகளிலோ, இல்லையென்றால் சிலர் முனு, முனுப்பு மூலமோ அவரவர் பக்தியை வெளிக்காட்டுவது வாடிக்கை.

அப்படியே இரண்டு அடி முன் சென்றால் ஓட்டுநர் பயிற்சி நிலையம் வலது புறம் கோவிலுக்கு எதிர் புறம். பணிப் பெண் அழகானவள்.

கோவிலில் என்னவோ ஹிந்துக்கள் மாத்திரம் திரும்பி பார்த்து வணங்க, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை திரும்பி பார்க்காதவர்கள் யாரும் இல்லை. புதிதாக வருவோர் கூட ஒரு நொடி அவள் அழகில் பார்வையை அவள் மேல் பதித்து அவள் அங்கங்களை பார்த்து தான் செல்வார்கள் பார்ப்போர் கண்களை கட்டிப் போடும் பேரழகி அவள்.

திருமணமானவர்கள், ஆகாதவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. சுற்று வட்டாரங்களில் பல பயிற்சி நிலையங்கள் இருந்தும் அனைவரும் அங்கு தான் தங்களது ஓட்டுநர் உரிமத்தை பெற விண்ணப்பிக்கிறார்கள்.

ஒரு முறை வருபவன் அவனது நண்பன், நண்பனோட நண்பன் என அனைவரையும் அழைத்து வருவான்.

அந்த நிறுவனத்திற்கு சொந்த காரர் கடந்து ஓர் ஆண்டில் அபாரா வளர்ச்சி, எப்போது அந்த வழி சென்றாலும் கடையில் இரண்டு மூன்று பேர் விண்ணப்பங்களோடு நிற்பதை காண முடியும்.

அந்த பெண்ணிற்கு ஊதியம் என்னவோ மாதம் எட்டாயிரம் தான். ஆனால் ஒரு மாதம் குறைந்தபட்சம் லட்சம் மேல் வருமானம் ஈட்டும் முதலாளி.

அதிக ஊதியத்திற்கு வேறு கடைகளுக்கு அந்த பெண்ணை அழைத்தும் அவள் செல்ல வில்லை.

அப்படியே நான்கு எட்டு முன்வைத்தால் பைக் சர்வீஸ் கடை, அதனை ஒட்டி 55 வயது தாத்தா ஒருவர் பழக்கடை வைத்துள்ளார்.

அது அடிக்கடி நண்பர்களோடு குமார் வந்து சர்பத் குடிக்கும் கடை தான். போதை தலைக்கேறிய நாட்களில் மறுநாள் காலையிலேயே அங்கு வந்து நன்றாக குளிர்ந்த நீரில் நான்கு சர்பத் போடுங்க தாத்தா ஸ்ட்ராங்கா போடுங்க அடிச்ச மப்பு தெளியனும் என்று அவரையும் விடைப்பது வழக்கம்.

அன்று வழக்கம் போல அவரது கடைக்கு எதிரே பைக்கை நிறுத்து விட்டு அவனது தம்பியிடம் சர்பத் குடிக்குரிய என்று கேட்க அவனும் சரி என்றான்.

தாத்தா ஜில்குன்னு ரெண்டு சர்பத் போடுங்க என்று கடைக்கு முன்புறம் வந்து நின்றான் குமார், அவனது வலது புறம் அவனுடைய தம்பி நின்றான். 

குமாருக்கு முன் புறம் இடது பக்கம் பாக்கு குடுவையும், சுண்ணாம்பு குடுவையும் வைக்கப் பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவனுக்கு முன்பாகா ஒரு செவ்வக வடிவ பிளாஸ்டிக் டிரை வைக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றி வைக்கப் பட்டிருந்தது.

அந்த கடைக் கார தாத்தா கை கழுவுவது மற்றும் சர்பத் கப்புகளை கழுவுவது அனைத்தும் அந்த நீரில் தான், அந்த செவ்வக வடிவ டிரையில் குமாரின் பக்கம் எதுவும் இல்லை. 

கடைகார தாத்தா அருகில் இரண்டு சர்பத் பாட்டில்கள் இரண்டு சர்பத் கப்புகள், எலுமிச்சை பழம் பிழியும் கட்டை, ஒரு சில்வர் ஸ்பூன் அந்த தண்ணீருள் இருந்தன. தாத்தா சட சட வென இரண்டு கப்புகளை சிறிது அலசி நிமிர்த்து வைத்து ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் ஒன்றை ஒரு கப்பிலும், மற்றொரு பாதியை இன்னுமொரு கப்பிலும் பிழிந்து சாரை ஊற்றினார்.

தொடர்ந்து டிரையில் வைத்திருந்த சர்பத் பாட்டில்களில் ஒன்று குறைவாக இருந்தது அதனை எடுத்து திறந்து இரண்டு டம்ளர்களிலும் 30 ஊற்றினார் அதன் பின் பிரிசரில் வைத்திருந்த ஐஸ் தண்ணீர் எடுத்து ஊற்ற துவங்கினார்.

குமாருக்கு அப்போது தான் பர்சை மறந்து வீட்டில் வைத்து விட்ட நினைவு வந்தது. அடிக்கடி வரும் கடை என்றபோதும் ஒரு வருட இடைவெளிக்கு பின் அங்கு வந்திருந்தான்.

தாத்தாவிடம்…குமார் கேட்டான். தாத்தா “GPay” இருக்கிறதா பர்சை மறந்து விட்டேன் என்றான் அவர் இல்லை என்றார்… சற்று தடுமாறியவனாய் 

தாத்தா சாயங்காலம் வரும் போது கொண்டு வரவா என்றான் குமார். அவரோ கடன் கேட்காதேமேலும் என்றார். சரி தாத்தா என்று முழுவதும் ஐஸ்நிரப்பி வைத்திருந்த சர்பத் கப்பை எடுக்க எத்தனித்தான்.

தாத்தா அவனை பார்த்து காசு இருக்கா என்று சற்று அழுத்தாகா கேட்டார்! அவன் இல்லை என்றான் கீழே ஊத்திரவா என்றார்?

குமார் அதிரிச்சியில் பதிலளிக்காது உறைந்தான். அவர் சற்றும் யோசிக்காதவனாய் ஊற்றி வைத்திருந்த சர்பத்தை குமாரின் முன்பு இருந்த செவ்வக பிளாஸ்டிக் டிரையில் வேகமாக ஊற்ற அதிலுருந்து அதிர்வில் பதறி துடித்த தண்ணீர் குமாரின் முகத்தில் தெறித்தது.

அவன் அசையும் முன்பு அடுத்த கப்பையும் ஊற்றினார் குமார் முகமும் சட்டையும் நனைந்தது. அவனது தம்பி மௌனம் காத்தான். 

கடையில் சுற்றியிருந்தவர்கள் குமாரை வேடிக்கை பார்க்க கிறங்கடித்த சிறு போதையும் சர்பத் குடுக்காமலே தெளிந்தது.

அவன் பதிலுக்கு கோபம் கொள்ளவில்லை ஏனோ! அவர் வயதானவர் என்றாயிருக்கலாம்! இல்லை நமக்கு ஏன் வம்பு என்று எண்ணியிருக்கலாம். பல அவமானங்களில் இதும் ஒன்றாக கூட இருக்கலாம். அவன் பைக்கில் ஏறி தம்பியை ஏற சொல்லி இருவரும் கூழாங் கல் எடுக்க விரைந்தனர்.

குமாருக்கு கோபம் இல்லையென்றாலும் வருத்தம் அதிகம். அவர் நன்கு பரிட்சயமானவர் ஆனால் இன்று ஏன் இப்படி நடந்து கொண்டார். பணம் இல்லாமல் இல்லை இருந்தும் நாற்பது ரூபாய்க்காக இப்படி நடந்து கொள்வார்களா என்று பல எண்ணங்கள் அவனுள் தோன்ற, அவனதும் தம்பி அண்ணா ஏன் அந்த கடைக்காரர்அப்படி பண்ணிட்டாரு நீங்களும் ஏதும் சொல்லவில்லை என்று கேட்க பதில் இல்லாதவனாய் அமைதியாக பைக்கை வேகம் குறைவாக செலுத்திக் கொண்டிருந்தான். 

அன்றிலிருந்து குமார் இன்று வரை சர்பத் குடிப்பதில்லை “சர்பத் ஒரு அவமான பானம்”



Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...