Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

முயற்சியின் மாயை

 அவனுக்கு அனைத்திலும் நாட்டம் கூட, எதை அவனிடம் கூறினாலும் அவன் அதன் கற்பனையை பற்றிக் கொண்டு வெகு தூரம் சென்றிடுவான். அதன் விளைவுகளை பற்றி அறியவில்லை. அறிந்திருக்க முயற்சிப்பதும் இல்லை.

வயது அப்படி பாராங்கல்லையும் அசைக்கும் துணிச்சல் அவனுக்கு இருந்தது. பெரியோர்கள் கூறுவார்கள் “கல்லை தின்னாலும் ஜீரணிக்கும் வயது” என்று. 

அவனுக்கு தொழில் செய்ய மிகுந்த ஈடுபாடு, வேலைக்கு சென்றால் நினைத்த நேரம் விடுமுறை எடுக்க முடியாது, நினைத்த மாதிரி செயல்பட முடியாது என்ற எண்ணம். யாரோ அவனுக்கு விதைக்க எப்படியேனும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும், என்ற எண்ணம் அவனுக்கு 

நிறுவனம் ஒன்றில் வேலை செய்து சேர்த்து வைத்த சிறிய தொகை கொண்டு அவனது உறவினர் ஒருவருடன் இணைந்து தொழில் துவங்கினான். உழைப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. அசாத்திய திறமைசாலி அவனுக்கு ஆண்டவனே துணை, அவன் துணை கொண்டு உள்ளாரா துணிச்சல் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை கொண்டவன்.

தொழில் முழுவும் அவன் ஒருவனால் மாத்திரம் நடைமுறை செய்யப்பட்டது அவன் அந்த தொழிலுக்கு புதிது என்றாலும் கொஞ்சம், கொஞ்சமாக கற்றுகொண்டு ஓரிரு மாதங்களில் சிறந்து விளங்கினான்.

அவனை தேடி பலர் வர ஆரம்பித்தனர், அவனை பற்றி அவன் இல்லாத நேரங்களில் அவன் உறவினர் இடம் பெருமையாக பேச ஆரம்பித்தனர். “அவன் தனியா நின்று மொத்த வேலையையும் செய்கிறான் மிகவும் திறமையான ஒருவன் உனக்கு கிடைத்துள்ளான் என்று கூற அவரால் அதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவன் மீது வீண் பழிகளை சுமத்த துவங்கினார், ஒன்றும் இல்லாத காரியங்களுக்கும் அவனை வசை பாடத் துவங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவன் அனைத்தையும் விட்டெறிந்து விட்டு அங்கிலிருந்து விலகி விட்டான். 

அதன் பின் அந்த உறவினரால் தனியாக சமாளிக்க முடியவில்லை. அவனை பலர் மூலம் தூது விட்டு பார்த்தார் ஆனால் அவன் வெறுத்துவிட்டான். இனி எந்த காலமும் அந்த உறவு வேண்டாமென்று முடிவு எடுத்துவிட்டான். 

அதன் பின் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் குறைந்துவிட்டது. தொழில் செய்தால் தனியாக செய்யவேண்டும் எந்த உறவோ நட்போ அதில் உடனிருக்க கூடாது என்று முடிவெடுத்தான். 

மறுபடியும் தொழில் செய்யும் முன் மிக கவனம் வேண்டும் என்றவன், நல்ல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் தொழிலில் அவன் எவ்வளவு முனைப்பானவனோ அந்த செயல் திறனை வேலையில் செய்தான். 

இறைவன் அவனை விட்டு விடவில்லை, அவன் இறைவன் மீது வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கை அவனை காப்பாற்றியது வேலையில் படிபடியாக வளர்ந்தான். உயர்ந்த பொறுப்புகள் கொடுக்கப் பட்டது. 

அதனையும் இறைவன் அருளால் சிறப்பாக செய்து பல சிறந்த தலைவர்களை உருவாக்கினான். 

முயற்ச்சி மட்டுமே தேவை அதை தவிற வேறு என்ன செய்து விட முடியும். பலன் இயற்கை தருவது. ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிடக் கூடாது.

முயற்ச்சின் மாயை ஒரு அசாத்திய சக்தி…










Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...