Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கோடை காலம் (The Summer)

 மழை வந்ததும் மனதிற்கு அத்தனை இதமாக இருக்கிறது அனைத்து ஜீவ ராசிகளுக்கும். இந்த மழைக்கு முன் உயிர்கள் வாழ்வா! சாவா! என்று போராடிக் கொண்டிருந்தன. 

சூரியனுக்கு கொஞ்சம் கூட இறக்கம் இல்லையா என்று திட்டாத மனிதர்கள் குறைவு, வசதி படைத்தவன் ஊட்டி, கொடைக்கானல் என்று செல்கிறான். இரண்டு மாதமும் அவனால் அங்கு இருக்க முடியும்.

ஆனால் இதே காரமான வெயிலில் தான் கூலி தொழிலாளி மூட்டை சுமக்கிறான், கட்டிட வேலைக்கு செல்பவன் செங்கல் சுமக்கிறான். அடிக்கும் வெயிலில் இப்போது தான் நிறைய செங்கல்கள் காயவைக்க முடியும் என்று முதலாளி அதிக செங்கல் அறுக்க கட்டளை இடுகிறான்.

பறவைகள் இறை தேடி அலைய அவைகளுக்கு உடலில் சக்தி இல்லை சிறிய தூரத்திலேயே களைப்படைகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நீர் நிலைகள் இல்லை, வீடுகள் உள்ளன. இருந்து என்ன லாபம்?


முன்பெல்லாம் எல்லா வீடுகளின் பின்புறத்திலும் கொல்லை பகுதி இருக்கும். குளிக்க, பாத்திரம் கழுவ, கால்கழுவ என்று தனித் தனியாக பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். புழுக்கள் கூட ஆனந்தம் பாடி கிடக்கும் மண்ணில் மேற்பரப்பில். கோழிகள் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டி இருக்கும்.

இன்றைய காலம் முழுவதும் அடைக்கப்பட்ட  கார்கிரீட்வீடுகள். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாது பலர் வாழ்ந்து வருகிறார்கள். கழிவறையும் வீட்டிற்கு உள்ளே வேறு என்ன வேண்டும். 

நம்மை மட்டும் நாம் கவனம் செலுத்தி வாழ துடிக்கிறோம். துளி அளவு பொது நலம் இல்லாதா சுயநலவாதிகளாக. காடுகளை வளர்த்த பறவைக் கூட்டங்கள் குடிக்க நீர் இல்லாமல் மாண்டு போகின்றன.

நம்மாழ்வார் கூறியிருந்த மண்ணின் அனைத்து உயிர்களும் சுயசார்பு வாழ்வை வாழ்கின்றன என்று ஆனால் மனிதன் அந்த சுயசார்பு வாழ்வை அவனுக்காக மாத்திரம் கட்டமைத்துக் கொள்கிறான்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி வலம் வந்தது, அதில் பறவை ஒன்றிற்கு இரு வாலிபர்கள் வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணீர் கொடுக்க தாகம் தவித்து போராடிக் கொண்டிருந்த அந்த பறவையும் அவர்கள் கொடுக்கும் நீரை குடித்து உயிர் பெறுகிறது. 

இதில் சுயசார்பு என்பது மாண்டுபோய்விட்டது. நம்மாழ்வார் சொன்ன அந்த சுயசார்பு தான் மனித சமுதாயம் இத்தனை உயர்ந்த நிலையடைய காரணம். நாம் மட்டும் உயர்ந்தால் போதாது சக உயிரினங்களும் மண்ணில் ஜனிக்க அவன் உதவி செய்ய வேண்டும்.

செத்தால் வறுத்து, பொறித்து தின்ன பல உயிரினங்கள் உண்டு. சிங்கத்தை காட்டிற்கு ராஜாவாக்கி அதனை நெருங்க யாராலும் முடியாது என்று நம்மில் ஒரு பிரமாண்டத்தை விதைத்து விட்டாரகள். இன்றைய இணைய சமுதாயத்தில் அனைத்தும் வெளி வந்து விடுகிறதுமறைத்து வைக்க ஏதும் இல்லை. எருமையிடம் முட்டு வாங்கி ஏழ முடியாமல் கிடந்த சிங்கத்தை பார்த்து பரிதாபமாக இருந்தது.

ஒன்றை மனிதன் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகம் அவனுக்கானது மாத்திரமில்லை. அனைத்து உயிரினங்களுக்குமானது. நாம் வளர வளர சமுதாயம் மாற, மாற சக உயிரினங்களும் வாழ நாம் ஏதோ ஒரு வகையில் துணையாக இருக்க வேண்டும். 

உடலை பிரிந்த பின்னர், கோழியும், வாத்தும், காகமும், மனிதனும் ஒன்று தான் அங்கு நம்மை அடையாள படுத்திக் கொள்ள உடலிருக்காது. கோழி தன் பெயரை முருகன் என்று கூறினாலும் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை.

வளர்ந்த இந்த நாகரீக மாற்றத்தில் மொட்டை மாடிகளில், கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள். சிறிது அரிசி அல்லது ஏதோ ஒரு உணவு அவை கொஞ்சம் இளைப்பாரட்டும். 

உங்களை அவைகள் வாழ்த்தாமல் போகாது. அனைத்து உயிரும் விரும்பும் மனிதனாக வாழுவோம். 

 

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...