Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

பிரசவ வார்ட் ஒரு இருட்டறை

 அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது பிரிட்டிஷ் காரன் என்றாலும் அதனை அன்று முதல் இன்று வரை அரசு தொடர்ந்து வருவது சிறப்பு.

எத்தனை ஏழை மக்கள் அரசு பொது மருத்துவக் கல்லூரிகள் மூலம் பலன் அடைகிறார்கள் என்றால் மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி தனி வார்டு அமைத்து அரசு தன்னால் முடிந்ததை செய்கிறது என்று கூறிவிட முடியாது.


ஏனென்றால் அரசால் இன்னமும் பல செய்யமுடியும். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை நடுநிலை வர்க்கத்தவர்கள் தொடங்கி அன்றாடம் காய்ச்சி வரை பலன் பெறுவது அரசு மருத்துவமனை மூலம் தான். 

இப்படி இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவமனை தனியார் கட்டிடங்களை மிஞ்சி அதி நவீன கருவிகள் மூலம் அதிக டாக்டர் எண்ணிக்கை மூலம் இன்னமும் எவ்வளவு பராமரிக்கப் பட வேண்டும்.

ஆனால் கவனம் எல்லாம் பேருந்து நிலையம் திறப்பதிலும், மணல் குடோன் திறப்பதிலுமே உள்ளது என்று மக்கள் குறை கூறும் அளவு உள்ளது. 

பிரசவ வார்ட் ஒரு இருட்டறை:

பிரசவ வார்ட்டிற்கு ஏதேர்ச்சையாகா நுழைய நேர்ந்தது ஒரு குறிபிட்ட வயது முதல் தனது உடலை பத்திரப்படுத்தி பாதுகாத்து. தன் உடல் தான் எல்லாம் என்று வாழ்ந்து வந்த பெண்களை அங்கு யாரும் பெண்களாக மதிக்கவில்லை.

பரிட்சை கால் போல ஒரு அரை, அங்கு இடுப்பளவு உயர இழு ஊர்தி அதனை சுற்றி திரை இப்படி இருபது, முப்பது ஊர்திகள் நிறுத்தப் பட்டுள்ளது.

அதில் வரிசையாக பெண்கள். ஆடைகளை அகற்றப் பட்டு எட்டு மாதங்களுக்கு மேலிருக்கும் அனேக பெண்களுக்கு. அந்த இழு ஊர்தியில் படுக்க வைத்துள்ளனர் மருத்துவர் பரிசோதைக்கு.

ஒரு நர்சம்மா எல்லாரையும் துணியை விலக்க சொல்லுது. மானம் பறிபோகும் நிலையில் ஒரு சில பெண்கள் கைகளால் அவர்கள் பிறப்பு உறுப்பை மறைத்து வைத்துள்ளனர். 


மறைத்து கொள்ளும் பெண்களை அந்த நர்சம்மா அங்க என்ன புதுசா இருக்கு? எல்லாருக்கும் இருக்கது தான் டாக்டர் வர நேரம் கையை எடுங்க என்று திட்டிக் கொண்டுள்ளது. 

தனி தனி மேஜை என்றாலும் அனைத்திற்கும் திரை உண்டு ஆனால் அதனை மூட அனுமதி இல்லை. மருத்துவர் வந்து பார்க்கும் போது ஒரு சிலருக்கு மாத்திரம் மருத்துவர் அந்த திரையை மூடிக் கொள்கிறார்.

பலர் முதல் முறை மகப்பேறு அடைந்தவர்கள். அவர்கள் மனதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க நேர்ந்தது. எத்தனை வெக்கம் அருகில் மற்ற பெண்கள்.

தலையை திருப்பினால் அங்கு அவர்கள் இவர்களை போலவே வேறு வழியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். 

அனைவரும் இரண்டு கால்களையும் மடக்கி விரித்து வைத்துக் கொண்டு மருத்துவருக்காக காத்திருக்கின்றனர். பார்க்கவே வருத்தமாக இருந்தது.

இத்தனை நவீனமாக்கப் பட்ட மருத்துவமனையில் கூட இப்படி தான் பெண்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனியறை தேவையில்லை பலர் வந்து போகும் இடம் என்றாலும் கொடுக்கப் பட்ட திரையை மூடி அவர்கள் சங்கோஜம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மற்றப்படி நோயாளிகளிடம் எரிந்து விழும் குணம் ஒரு சில மருத்துவர்களிடம் மட்டுமே இல்லை. பலர் எப்போதும் வரும் நோயாளிகளை திட்டியே தீர்க்கின்றனர். 

முதலில் பெண்கள் அப்படி ஒரு சூழலை எப்படி கையாள்வார்கள் சுற்றி பெண்கள் என்றாலும், இப்படி ஓர் சூழ்நிலைக்கு பழக்க படவில்லையே.

பெரியவர்கள் ஊட்டி ஊட்டி வளர்த்த மானம், அது உண்மையில் உடலில் இல்லை மனதில் தான் என்று அவர்கள் அன்று உணர்ந்திருக்க முடியுமா என்றால் தெரியவில்லை.

ஆனால் ஒரு தெளிவு கிடைத்திருக்கும். பலரால் எந்த யோசனைக்கும் சென்றிருக்க முடியாது. சீக்கிரம் டாக்டர் வந்து பார்த்துட்டு விட்டா போதும் இனி இந்த மருத்துவமனைக்கு வரவே கூடாது என்று தான் எண்ணியிருப்பார்கள்.

காலம் மாறிக் கொண்டு உள்ளது அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் விகிதம் நாளுக்கு, நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப இன்னும் பல வசதிகளை அரசு முன்னெடுக்கும் என்று நம்புவோம். 

செவிலியர்களையும், மருத்துவர்களையும் வாழ்த்துவோம். 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...