Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

முட்டுக் கொடுப்பவர்கள் அரை வேக்காடுகள்

 ஒரு தவறு ஒருவன் செய்வானாகில் அது எத்தகையது என்பதை முதலில் உள்வாங்க வேண்டும். அது கண்டிக்க பட வேண்டியதா இல்லை சொல்லி புரியவைத்து விடலாமா என்று.

தவறுகளின் வீரியம் எத்தகையது என்பதை பொறுத்து அதற்க்கான தண்டனைகளை சமூகம் அரசியல் சட்டம் உருவாக்கி வைத்துள்ளது. அப்படி அந்த சட்டங்கள் முறையானவையா என்பவை அல்ல விவாதம்.

தவறுகளுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் போது அது தவறே இல்லை என்று அவர்களுக்கு துணை நிற்பார் சிலர். அது ஏற்புடையது அல்ல.

ஒரு சிறு தவறு தான் என்றாலும் அதனை நிச்சயம் புரியவைக்க வேண்டும். அல்லாது அவர்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர்கள் வாழ்வை தவறான பாதையில் கொண்டு போய் சேர்க்கும்.



இன்று அவர்கள் துணை நிற்க சிறிய தவறு பெரிய தவறாக மாறும். இன்று இவர்கள் உதவி செய்தது போல அந்த பெரிய தவறிற்கு உதவ முடியாத நிலையில் அவர்களும் தள்ளப் படலாம். 

அண்மையில் காவலதிகாரி ஒரு வேனை நிறுத்தினார். அந்த வேனில் டிரைவர் இறங்கி செல்ல வாகனத்தின் பத்திரங்கள் அனைத்தையும் கேட்க அவரும் அவற்றை அவர்களிடம் காண்பிக்கிறார்.

ஆனால் அவர் அதில் திருப்தியாகாதவரை அவருடைய ஓட்டுநர் உரிமம் கேட்டார் அதையும் அந்த வாகன ஓட்டிக் கொடுத்தார்.

காவலதிகாரிக்கு அவரை எப்படியாவது மடக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. வாகனத்தை சோதித்தார். வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்தார். எல்லாம் சரியாக இருக்க சரி நீ கிளம்பு என்று அனுப்பினார்.

ஏதோ நினைத்தவராய் அவனை நில் என்று கூறி அருகில் சென்று உன்னுடைய ஐடி கார்டை கொடு என்று கேட்க அவன் தீய நேரம் அவன் ஐடி கார்டை எடுத்து வர மறந்து விட்டான்.

அவ்வளவு தான் அந்த காவலருக்கு ஆனந்தம். அவந்த ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். என்ன காரணம் என்றால் எப்போதும் ஐடி கார்ட் கையில் இருக்க வேண்டுமாம்.

என்று ஒரு சப்பை காரணத்தை கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூன்று மணிநேரங்கள் பின் இரண்டாயிரம் காசு வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதுபோன்ற காவலர்கள் அராஜகம் செய்ய நாம் தான் காரணம். நாம் தான் அந்த அரை வேக்காடுகள்.

முதலில் 100௹ 200௹ கொடுத்து இவர்களை பெரிய ஜாம்பவான்கள் ஆக்கியது நாம் தான். நம் பணத்தில் வாழும் இது போன்ற அரசி அதிகாரிகள் வரம்பு மீறி தான் செயல்படுகிறார்கள்.






Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...