Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கனவு ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடு

நாள் : 19/05/2024

நாடு : இலங்கை

இடம் : புத்தளம் 

நேரம் : 6:10

    


        தூக்கம் வரும் அனைவரும் தூங்கத் தான் செய்வார்கள் சிறிது கண்ணயர்ந்து விட்டேனாம்… கனவும் வந்தது வெள்ளமும் வந்தது. 

உண்மையில் கனவுகள் அனைத்தும் நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது. சாதாரணமாக கனவு தானே என்று விட்டு விட முடியாது. கனவுகள் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஆழ்ந்து பதிந்த நினைவுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது நடக்க போவதாக இருக்கலாம். தினமும் கனவு காண்பவர்கள் வரிசையில் தினம் தினம் புது புது கனவுகள் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இல்லாதவை இப்படி கனவுகள் தினமும் தோன்றினாலும் சில கனவுகள் நம்மை பயமுறுத்தி விடும். 

சில கனவுகள் நமது வாழ்வில் நடக்கும். கனவுகளுக்கு தொடர்போடு சில கதைகளும் வாழ்வில் ஐக்கியமாகும்.

அன்று பெரிய சுனாமி கோடைகாலம் பலர் அங்கும் இங்கும் நீரில் அடித்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நான்மட்டும் நீரோட்டம் அறிந்தவனாகவும் அந்த கோர அலைகளில் நீந்தும் வல்லமை பெற்றவனாக, எனக்குள் இருந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரன் அனைவரையும் காப்பாற்றும் உத்வேகத்தில் இருக்க.

அவனை தடுக்கலாகதவனாய் இயற்கையும் அவனுக்கு துணை புரிகிறது. அவனால் இயன்ற அளவு மக்களை காப்பாற்றிக் தப்பிக்க ஏதுவானா இடங்களில் சேர்க்கிறான்.

மூழ்கவிருந்த கப்பலை கண்டு அதில் இருந்து மரண பிடிக்குள் தவிக்கும் மக்களை காப்பாற்ற முனைகிறான், திடீரென்று அலை சத்தங்கள் வித்தியாசமாக குளத்து நீர் காற்றில் அலம்புவது போல சத்தம் கேட்கிறது.

அப்போது தான் லேசாக விழிப்பு தட்டியது அது கனவு என்பது தோன்றியது சிறிது புரண்டு படுக்க தண்ணீருக்குள் முழுவதும் நனைந்து இருப்பதை உணர்ந்து எழுந்து பார்த்தால் அரை முழுவதும் தண்ணீர் தரையில் வைத்திருந்த தொலைபேசி மூழ்கும் அளவு தண்ணீர்

நிஜமாகவே சுனாமி தான் என்று அலறி அடித்து எழுந்து பக்கத்து அறைகளில் படுத்திருந்த நண்பர்களை எழுப்பி கூற அனைவர் அறையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்த நண்பர்கள் பயந்து வெளியில் ஓட கதைவை திறக்க வெளியில் இருந்து அதிக நீர் அறைக்குள் சாடியது 

அதன் பின் தான் புரிந்தது மாடியில் அமைக்கப்பட்டிருந்த சிட் அவுட்டில் மழை நீர் வடிய அமைத்திருந்த குழாய் அடைபட்டு நீர் பெருகி வீட்டிற்குள் வந்துள்ளது.

சுனாமி வந்தது போன்ற கனவு தண்ணீர் உள் நுழைய ஆரம்பித்த போதே துவங்கியிருக்கிறது, உறக்கத்தில் கவனிக்க முடியவில்லை ஆனால் உள்ளுணர்வு அதனை கனவு வாயிலாகா புரியவைக்க முயற்சித்து உள்ளது. 

அதனை உணரும் அளவு தெளிவு இல்லாத உறக்கம். உறக்கம் தெளிந்த பின் அனைத்தையும் உணர முடிந்தது கனவின் அடி நாதமும் புரிந்தது. 

இது கனவின் மூலம் காலம் எதிர்வர இருக்கும் விளைவு ஒன்றை முன்கூட்டியே தெரியபடுத்தி அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.

கனவு என்பது வெறும் கனவு அல்ல அது ஒரு இயற்கையின் முன்னெச்சரிக்கை ஏற்பாடு...



Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...