Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

யார் இந்த பூமியில் நிரந்தரமானவர்கள் ?

எந்த பூமியை பற்றி பேச பால்வெளில் பல்லாயிரம் பூமிகள் உள்ளது, இதில் நாம் எந்த பூமியில் இருக்கிறோம் என்பதை ஏதோ ஒரு மனக்கணக்கில் குறித்து வைத்திருக்கலாம் யாரோ ஒருவர் அதனை அங்கீகாரம் செய்ய ஒருவரை நாடியிருக்கலாம். 


அவர் அதனை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு அனுபவ அறிவாக இருக்கலாம் அந்த அனுபவ அறிவு அவர்களுக்கு கிடைத்தது ஏதாவது ஆன்மீக புத்தகத்திலா இருக்கலாம். 

மனிதன் மனத்தால் தெய்வீக பரிணாமத்தை அடையாமல் அவனால் எதையும் ஊர்ஜித படுத்த முடியாது. அவன் அகவழி பயணம் மாத்திரமே மெய்ஞானத்தை தரும். அந்த ஞானம் அவனை உயர்த்தும். 

அண்ட சராசரங்கள் யாவையிலும் அவனை வியாபிக்க செய்யும். ஆனால் பூமியில் நிலையாக, நிலையானவர்களாக இருக்க முடியுமா என்றால் சாத்தியம் இல்லை. சித்தர்கள் ஞானிகள் தேவர்கள் எல்லாம் மரணமற்றவர்கள் தான் என்ற போதும் அவர்கள் பூமியில் இல்லையோ என்று தான் தோன்றும்.

உடலை விட்டு உயிர் சென்ற பின் உடல் இன்பங்கள் அதாவது உலக இன்பங்கள் எல்லாம் மாயை என்கிறாரகள். மாயா நதியில் தினம் தினம் உழன்று வாழும் நமக்கு மாயம் என்ன மந்திரம் என்ன வென்று தான் தோன்றுகிறது.

நிரந்தனமானவர்கள் என்று பூமியில் ஏதும் இல்லை மலைகளும், கடல்களும் கூட காற்றும் நதியும் கூட எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

எல்லாம் கால மாற்றத்தில் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. நிரந்தரம் என்ற நினைப்பே நிரந்தரம் இல்லா நிழல் நினைவு தான்.

நிரந்தரம் என்பது உண்மையில் மாற்றம் ஒன்றுதான் அந்த மாற்றம் ஒன்று தான் என்றும் நிரந்தரமாக உள்ளது.

பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாம் அரசனோ அரண்மனை மந்திரியோ யாராக இருந்த போதும் மரணம் என்பது உறுதி, இருந்தும் மனிதர்கள் தவறு செய்ய தயங்குவதில்லை.

அவர்கள் மனக்கணக்கில் கோபுரம் கட்டி வாழ்கிறார்கள் வாழ்வு நிலையானது நாமும் நிலையானவர்கள் என்று நம்புகிறார்கள்.

அதனால் எப்போதும் போய் பேசி ஏமாற்றி வாழ்கிறார்கள் இப்படி அவர்கள் வாழ வேண்டிய அவசியம் என்ன?

நம்மை சுற்றி என்ன நடக்கிறது! நேற்று நம்மருகில் உயிரோடு இருந்தவர்கள் இன்று வெறும் புகைப்படமாக இருக்கிறார்கள். 

இப்படி பல மரணங்களையும், அவர்கள் வாழ்வையும் பார்க்கும் போது மனதிற்குள் பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது.

நாம் எதற்க்காக பிறந்தோம் சாதாரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு செல்லவா இந்த பிறவி என்பதில் ஒரு நிறைவு இல்லை.

ஊரறிய ஏதோசாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் தற்போது குறைந்து நம்மை நாம் மாற்றி விட வேண்டும். என்று தோன்ற செய்கிறது இல்லாமல் வெறும் கூலிக்காக மாத்திரம் வேலை செய்து உடல் வாடி மடிவதை விட ஒரு சிறந்த செயல் ஒன்றை செய்து விட்டு நிம்மதியாய் மரணிப்பது சிறப்பு தான்.

எல்லாம் இறையருள் தான் என்றபோதிலும் மனதின் கற்பனைகளை கட்டுப் படுத்த பல வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது அல்லது போதித்துள்ளார்கள் என்று கொள்ளலாம்.

நிரந்தரமானா ஏதும் நிரந்தரமாய் இல்லையென்று தான் தெளிவு படவேண்டியுள்ளது.








Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...