Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

இறந்து போன நாய்க் குட்டிகள்

 நாய்களை அறியாத மனித பிறவி ஒன்று வையகத்தில் இல்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும்மான நெருக்கங்களில், மனிதனுடன் மிகவும் நெருங்கி பழகும் ஒரு மிருகம் தான் இந்த நாய்கள். 

கோம்பை, கன்னி, சிப்பிப் பாறை என்று மன்னர் காலத்தில் நாய்களை போருக்குப் பயன்படுத்திய வரலாறும் உண்டு. அன்றாட வாழ்வில் காலை முதல் அன்றாடம் நாம் செல்லும் இடமெங்கும் நம்மை பின்தொடரும் காவல் காரன் என்றால் மிகையாகும். 

அதற்கு என்று ஒரு செல்லப் பெயர் வைத்து அழைப்பது உண்டு பலவேறு பேர்கள் இருந்தாலும் என்னுடைய ஆசை முழுவதும் கறுப்புக் நிறமான நாய் ஒன்றை வாங்க வேண்டும் அதுவும் அவனை கருப்பன் என்று பெயர் வைத்து வளர்க்க வேண்டும் என்பதாகும்.

அது ஒரு அலுவலகம், சைட் ஆபீஸ் ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக கடற்கரை பேக் வாட்டர் அருகில் அமைந்துள்ளது.

அந்த அலுவலகத்தில் மொத்தம் ஐந்து பேர்கள் தான் வேலை செய்கிறார்கள் அதில் இரண்டு பேர்கள் உள்ளூர் வாசிகள், மற்றைய மூன்று பேர்கள் வெளியூர் வாசிகள்.

இங்கு இந்த அலுவலக ஊழியர்களை நம்பி நான்கு நாய்கள் அவர்கள் எப்போது வேலைக்கு வந்தாலும் ஓடி வந்து வீட்டு நாய்கள் போல அவர்களை பின் தொடர்வது வழக்கம்.

சுய தேவை தானே ஒவ்வொருவரையும் மற்றொருவருடன் இணைக்கிறது. அதுவும் அப்படித் தானே பலர் கேவலமாக நாயைப் போல அண்டிப் பிழைக்கும் ஆட்கள் என்று பலரை விமர்சிப்பது உண்டு.


அப்படியானால் அனைவரும் நாய்களை போல அண்டிப் பிழைப்பவர்கள் தான். யாரும் இங்கு தனியாக மார்தட்டிக் கொண்டு நானே என்னைப் பார்த்துக் கொள்கிறேன் நான் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூறித் திரிவார்கள். அப்படி ஒன்று நிகழப் போவது இல்லை மனித துணை இல்லையென்றால் இயற்கையின் துணை 

அவ்வளவு தான் இயற்கை அண்டி நாய்ப் போல பிழப்பு நடத்துபவர்கள் என்று தான் அவர்களைக் கூற வேண்டும். 

அப்படி அந்த அலுவலக நாய்கள் விடுமுறை நாட்களில் உணவு இல்லாமல் தவிக்கும் அருகில் உள்ள அலுவலக காவலாளி தினமும் வருவதால் அவர் கொடுக்கும் உணவுகளுக்கு சண்டை தான் நாய்களுக்குள்.

இப்படியான ஒரு வேளையில் தான் அந்த பாராட்டுதலுக்குரிய நிகழ்வும் நடந்தது. பசி பட்டினி இவைகள் எப்படி வருகின்றனவோ அப்படியே கால சுழலில் காமமும் அந்த நாய்களுக்கு சுழன்று விடுகிறது.

பெண் பால் என்றும் இன்பத்தின் பின் பெரும் துன்பம் சந்திக்கும் என்றாலும் அந்த தேவதைகள் அவற்றை விரும்பியே ஏற்றுக் கொள்கின்றன. 

அப்படி கருவுற்ற நாய் ஆறு குட்டிகளை ஈன்றிருந்தது. வருத்தம் என்னவென்றால், தாய் பால் கொடுக்கும் அளவு அந்த நாய்க்கு உணவும் இல்லை உடலில் வலுவும் இல்லை. காலத்தின் நிர்பந்தம் பாலில்லாத அந்த காம்புகளை சப்பிக் கொண்டு கிடந்தன அந்த பிஞ்சு நாய்கள்.

மனதில் இறக்கம் இருந்தாலும் சேவை செய்ய பத்தில் ஒரு மனிதன் தானே முன்வருவான். மற்றையோர் விதி அப்படி இருக்கு என்று தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். அல்லது செய்து கொள்கிறார்கள்.

சில நாட்களில் இரவு வேலைகளில் வேலை இருக்கும் அப்படி ஒரு நாள் இனி வர வேண்டாம் என்றது அந்த ஊழியர்கள் மனம்.

பகல் பொழுதில் அனைவரையும் டிராப் செய்யும் வாகன ஓட்டுநர் கவனம் இரவில் இல்லையே. வேலை செய்பவர்கள் கூட.

உணவுக்காக காத்திருந்த நாய்கள் வாகனம் அலுவலக வாசல் வந்ததும் ஓடி வருவது வழக்கம் அந்த நாய்கள் உடன் புதிய வரவுகளும் தான் சேர்ந்து வருகிறார்கள்

வருவது மட்டுமின்றி வாகனத்தின் டயர்களின்கீழ் ஓடி விளையாட, வாகனத்தை நகர்த்தும் முன் வேலை செய்பவர்கள் டயர்களின் கீழே சென்ற நாய்க் குட்டிகளை விரட்டி விடுவார்கள். 

அல்லது டிரைவர் அதைச் செய்துக் கொள்வார். அலுவலக ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்ட வாகனம் கிளம்பும் முன் ஹார்ன் அடித்து நாய்களை டயர்களின் கீழிருந்து வெளி வரச் செய்து சுதாரீப்பாகா தான் எடுப்பார் டிரைவர்.

இருந்த போதிலும் இனி என் தாய் போல பட்டினி என்னால் இருக்க முடியாது என்று எண்ணியதோ என்னவோ கண்களில் சிக்காதா அந்த நாய்குட்டி டயரில் மாட்டிக் கொண்டது இது அன்றோடு முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.

இப்படி ஒன்று இரண்டு என்றும், இரவு பகலென்றும் அந்த ஆறு குட்டிகளும் இறந்து போய் விட்டது ஆனால் அதில் இரண்டு குட்டிகள் உணவில்லாமல் சோர்ந்து போய் இறந்து விட்டன. 

இறக்கம் இல்லாதா அலுவலக ஊழியர்கள்;

 அப்படி கூறிவிட முடியாது, ஏனென்றால் அவர்கள் கடைகளில் தங்கள் உணவை முடித்துக் கொள்கிறார்கள். மனதில் குடிகொண்ட பாசம் அடிக்கடி அவைகளுக்கு கடையில் இருந்து உணவு அல்லது பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி போடுவது வழக்கம். 

அவர்களும் வேறு என்ன செய்து விடமுடியும். வேலை பிரஷர் அதிகம் கொண்டவர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் முதலாக இருக்கும் அல்லவா! 


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...