Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

யார் இறந்தால் என்ன?

 வாசல் வரை வழியனுப்பும் மனைவிகள் ஏராளம் உள்ள ஊரில் வாசல் தாண்டி கணவன் வேலை செய்யும் இடம் வரைக்கும் வழியனுப்பவும் தயங்காதவள் தான் மகேஸ்வரி. வைராக்கிய காரிதான்.

கடுகு சிருந்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ற அவள் உடலைமைப்பு. பதினொரு வயது மதிக்கத் தக்க ஒரு குமரனின் உயரம் இருப்பாள் மகேஸ்வரி.

ஆனால் நடையில் அவள் வேகம் வேறு யாரும் ஈடுகொடுப்பது அத்தனை சாத்தியமில்லை. கோளாறு என்னவென்றால் அவள் கண்கள் நேராக சாலையை கவனிக்காது. அக்கம் பக்கம் என சிப் செயலிழந்த எந்திரன் ரோபோ வின் தலை சுற்றுவது போல மேய்ச்சல் கொள்வாள்.

அதே வேகத்தில் அடுத்த தெரு கடந்து, கமலா, மாலா என ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கடந்து வந்த பாதையில் யாரையாவது அவர்கள் வளர்ச்சிக் கண்டு குறை கூறாமல் செல்ல மாட்டாள். 

பதினொரு வயது சிறுவன் உயரம் என்றாலும் 25வயதில் இரண்டு மகன்கள் உண்டு. மகன்கள் படிப்பை முடிக்க தான் காத்திருப்பு என்பது போல படித்து முடிக்கவும் ஊரில் யார் கை, காலிலாவது விழுந்து வேலை வாங்கி விட வேண்டும் என்ற ஆக்ரோசம் நிறைந்த அவள் அதையும் செய்து முடித்தாள்.


ஊரிலே யாரும் விரும்பாதா ஜீவன் இருந்தும் யாரும் விலக்குவது இல்லை. கணவன் மணி அவர் மேஸ்த்திரி ஊரில் அவரை தெரியாதவர் யாரும் இல்லை எனலாம்.

அவரது சிறப்பு கடமை மாத்திரம் தான், யார் இறந்தாலும் அவர் அதில் பங்கு கொள்ளவதில்லை அவரைப் பொறுத்தவரை வேலை தான் முக்கியம் அவருக்கு.

அப்படி ஊரில் நம்ம வைத்தாலும் யார் வீட்டுக் கதையாக இருந்தாலும் ஊர்த் திண்ணை அவற்றை உறிந்து விடுமே! அப்படித்தான் மணியின் கதையும்.

மணிக்கு திருமணமாகிய ஆரம்ப காலம் அது. மகேஸ்வரி அவ்வளவு அழகு எல்லாம் கிடையாது தோல் வெளுப்பு என்றாலும் தலை உடலை விட கொஞ்சம் அளவு வேறுபடும் அதிகமாக. எப்படியிருந்தால் என்ன திருமணம் ஆன பின்பு என்ன ரசனை. மணியோ மகேஸ்வரியிடம் காதலில் விழுந்தார் காதல் நாளடைவில் மனைவிக்கு அடிமையாக்கி விட்டது எனலாம். 

இப்படி திருமணமானா புதிதில் மணியின் நண்பன் ஒருவன் இறந்து போக, இறப்பிற்கு செல்ல மணி தயாரானார் ஆனால் அவன் மனைவி அவனை போக அனுமதிக்கவில்லை. அவன் மீதானா அக்கறை என்று கூறமுடியாது.

அக்கறை அவன் வேலை மீது. மணியை எகிரி பார்த்து மாதம் ஒன்று இரண்டு மரணம் நிகழும் அதற்க்ககா வேலைக்கு போகாமல் லீவு எடுத்தால் நம் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று மணியிடம் கேட்க? அதுமட்டுமில்லாமல் நான் தான் வீட்டில் இருக்கிறேன் நான் போய் வருகிறேன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். 

யார் இறந்தால் என்ன நம்பிள்ளைகளுக்கு நாம் தான் சேர்த்து வைக்க வேண்டும். இறந்தவனா நமக்கு உதவி செய்வான் என்று கூறி மணியை ஒவ்வொரு முறையும் வேலைக்கு அனுப்பி விடுவாள். அதுவும் வழக்கமாக போகும் வழி அல்லாது காடுவழியாக வீட்டின் கொல்லை புறத்தில் இருந்து கிளம்புவான் மணி.

பலர் கூறுவதுண்டு இவன் செத்தா எவன் போவான் இப்படி பணம் பணம்னு திரியுறான் என்று. ஆனால் பாவம் மணி என்னவோ கைப்பவையாகவே மாறிவிட்டார். 

ஊர் என்பது நமது பாதுகாவல், ஊரிலுள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் உறவினர்கள் தான் ஆகவோ சுப நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பார்கள். 

நாளைக்கு நமக்கும் நாலு சனம் வேண்டும் என்பதற்காக என்ற சுயநலம் மாத்திரம் கொண்டு இல்லை, நம் குடும்பத்தினர் சூழ்நிலைகளில் ஊர் மக்கள் தான் வந்து நிற்பார்கள்.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...