Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

விசம்

 எண்ணும் அனைத்தையும் கூற வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்குமில்லை. இருந்தும் சிலரால் அவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது.

மனதின் அழுத்தம் காரணமாக அவர்களால் எண்ணங்களை அதிகப்படியாக கோர்வையாக கடந்த முடிவதில்லை. ஆகையால் தோன்றியவற்றை உடனே பேசி முடிக்கிறார்கள். 

என்ன பேசுகிறோம் என்று கூட அவர்கள் அக்கறை கொள்வது இல்லை. பல வேலைகளில் நெருங்கிய சிலருடன் பலர் பெரும் சோகங்களை கொட்டித் தீர்ப்பதாகவே எண்ணிக் கொண்டு இப்படி தலைகால் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.


பேசுவது என்றால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். அர்த்தமற்ற வார்த்தைகள் எதற்க்கு. ஏதோ பேச வேண்டுமென்று பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

நண்பர்கள் கூடிய மாலை விருந்து அது அங்கு மது போதை தலைக்கு ஏறிய ஒருவன், அருகிலிருந்தவனை பார்த்து “நீ யாரு தெரியுமா எனக்கு? நீ என்னோட உசுரு மச்சான் உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் தெரியுமா” என்றான் அடுத்து கொஞ்சம் நேர அமைதியில் மற்றவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

தொங்கிய தலையை உயர்த்திக் கொண்டு “மச்சான் நீ யாரு தெரியுமா எனக்கு” என்று ஆரம்பித்தான் இங்கு என்னவோ இரண்டாம் முறை தான் அங்கு அது பல பத்துகளை கடந்து விட்டது. இருந்தும் அவன் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பார்கள் அது நட்பு.

என்றான போதிலும், விஷம் கலந்த வார்த்தைகளை சிலர் வெளிப்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகிறது.

இப்படி பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வையும் செம்மையாக வாழ மாட்டார்கள், யாரையும் வாழவும் விட மாட்டார்கள். அவர்கள் தேவை எல்லாம் யாரையாவது பற்றி அவதூறு பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதில் அவர்களுக்கு ஒருவித அலாதி இன்பம், பலவகையான மனிதர்களை காணமுடிகிறது. சிலர் பிறர் அவர்களுக்கு தீங்கு விளைவித்தாலும் அவர்கள் அதனை பெரிதாக வெளிக் காட்டிக் கொள்வதில்லை, மனதிலே வைத்துக் கொள்கிறார்கள்.

பலர் அவர்களை பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் துடிக்குறார்கள். சிலர் அவற்றை பிறரிடம் கூறி தங்களை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள்.

எத்தைய உணர்வை வெளிப்படுத்தினாலும் அனைவரும் பாதிக்கப் பட்டவர்கள் தான். பேச்சில் விஷம் என்பது வார்த்தைகளில் நயவஞ்சகம் இருக்கும்.

என்றோ செய்த தவறுகளை சாடையாக சுட்டிக் காட்டிக் பேசுவார்கள். அது மட்டுமல்லாமல் பலர் வீடுகளுக்கு சென்று அவர்கள் குறைகளை வெளிப்படையாக முக பாவனையை மாற்றிக் கொண்டு இத்தனை வருசம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா ஏதாவது பாவம் பண்ணிருப்பீங்க என்று சொல்லி விடுவார்கள்.

வார்த்தைகள் ஒருவரை எத்தனை ஆழம் பாதிக்கும் என்ற அறிவு இல்லாதவர்கள் அவர்கள்.

பல பேச்சுகள் கேட்டு, பிறரை பேசி பின் வருந்தி எத்தனை காலம் மனித சமூகம் இப்படியே போகும். 

எந்திரங்கள் வரும் தெளிவாக பேசும். தேவையற்ற பேச்சுகளை அவைகள் பேசப் போவது இல்லை. 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...