Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

குழுவன்

 


ஒரு இனத்தின் பெயர் பின்னாளில் சாதிகள் என்று பிரிக்கப் படுகிறது. அப்படி நான் சிறுவயதில் கேள்விப் பட்ட ஒரு இனம் இந்த குழுவ இனம். 

இவர்களை தனியாக வரையறுக்க வேண்டுமென்றால் இவர்கள் தினமும் குளிப்பது இல்லை, குளத்து மீன், ஆமை, பாம்பு இவைகள் இவர்களுடைய பெரும்பாலான உணவு பழக்கம். பாம்புகளின் நெய் இவர்களிடம் எப்போதும் இருக்கும் என்பார்கள். இதனை கடந்து தொழில் அந்த காலத்தில் மிதிவண்டியில் ஐஸ் விற்க செல்வதும். திருமண வீடுகளில் எச்சி இலைகளை அப்புறப் படுத்துவதும் மேசையை துடைப்பதும் போன்ற வேலைகளை செய்தார்கள். 

ஆற்றங்கரையில் பட்டா இல்லா நிலத்தில் தங்கள் குடிசைகளை அமைத்து இருந்தனர். அவர்கள் குடியிருந்த ஆற்றங்கரை கடந்ததும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதில் தான் அவர்கள் பிள்ளைகளை ஆசிரியரின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு தான் நானும் படித்தேன் என்னுடன் இருவர் பயின்றனர் இருவரும் எனக்கு நண்பர்கள் தான். பள்ளிக்கு அணிந்து வரும் சீருடை அவர்கள் துவைத்து உடுத்துவது மிகவும் குறைவு ஆனால் அவர்களிடமிருந்து வியர்வை நாற்றமோ வேறு ஏதேனும் அசவுகரியமாக தோன்றியது இல்லை. ஆனால் சில வேலைகளில் கொஞ்சம் பயமாக இருக்கும். 

காதில் பாம்பு சட்டையை மடித்து வைத்திருப்பான். கொஞ்சம் உயரம் அதிகமானவன் என்னை விட சிங்கப்பல் ஒன்று உண்டு இடது புறம் அப்படியே இடது காதில் பாம்பு சட்டை ஈ என்று சிரித்துக் கொண்டே நிற்பான், மலைபாம்பு நெய் ஒன்று ஒரு நாள் ஒரு சிறிய டப்பாவில் எடுத்து வந்தான் இதை குடித்தால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் மூச்சு வாங்காது. போலீஸ் துரத்தினாலும் நம்மை பிடிக்க முடியாது என்று கூறினான் அதற்கு அவன் யாரிடமும் விலை கேட்கவில்லை. 

ஆனால் என்னுடன் இருந்த பலருக்கு அதை வாங்கி குடித்தால் நன்றாக ஓடலாம் என்ற ஆசை இருந்தது ஆனால் இந்த டப்பாவை திரந்ததும் அதிலிருந்து வந்த ஒரு வித வாடை யாருக்கும் உகந்ததாக இல்லை என்பதனால் அதை யாரும் வாங்கி அருந்தவில்லை.

பாம்பை பிடித்து வயற்றைக் கிழித்து நெய்யை எடுத்து விட்டு மீண்டும் தைத்து அதனை விட்டு விடுவோம் என்றான். மலை பாம்பு நெய் வாங்கி குடித்து போலீசிடம் இருந்து தப்பிக்கலாம் என்று அவன் கூறும் போது யாருக்கும் நம்மளை ஏன் போலீஸ் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுவயதில் வராமல் தான் இருந்தது. 

அவர்கள் யாரும் எட்டாவது வகுப்பு பின் அவர்கள் படிப்பை தொடரவில்லை ஆனால் கோவில் திருவிழாவின் போது ஐஸ் விற்க வருவார்கள். எங்களுக்கு மலிவு விலையில் தரப்படும். நண்பர்கள் என்ற பாஸ் மூலம். இன்றும் அவர்கள் அதே குடிசையில் தான் இருக்கிறார்கள். பக்கத்து ஊரில் அரசு காலனியில் வீடு கொடுக்கப் பட்டுள்ளது இருந்த போதும் அவர்கள் குடிசைகளிலே வாழ்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் பண்ணி வளர்க்கிறார்கள் திருமண வீடுகளில் எச்சி இலைகளை வீட்டுக் காரர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முன்பு கார்த்திகை பொங்கல் போன்ற நாட்களுக்கு வீடு வீடாக வருவார்கள் கொழுக்கட்டை பொங்கல் அனைத்து வீடுகளிலும் கொடுக்கப் படும்.

இப்போது யாரும் உணவிற்கு கையேந்தாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர் உலக மாற்றம் அவர்களுக்கு சிறிது உளவியல் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...