Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

விஜயின் அரசியல் பயணம்

 யார் யாரோ என்னவெல்லாமோ பேசினார்கள் பல ஆயிரம் விமர்சங்கள் இது விஜய் க்கு மட்டும் தான என்றால் இல்லை. ஆழும் கட்சி, ஆழ்ந்த கட்சிகள் என அனைவரும் சுமந்த ஒன்று தான். கட்சிகளுக்கு மட்டும் தானா என்றால் இல்லை தனிபட்ட மனிதனுக்கும் உண்டு. சரி இப்போது அரசியல் களம் புகுவோம்.


எப்படி மக்கள் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கிறார்கள் ? ஏதோ ஒரு காரணம் மக்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம், உதாரணமாக நான் ஒரு படிப் பரிவில்லாதவன் எனும் போது நான் பார்க்கும் படங்கள் என்னுடைய தனிப்பட்ட குணங்களுடனும் அல்லது வாழ்வியல் உடனும் இணையும் போது எனக்கு அது பிடித்துப் போகிறது. அந்த கதாபாத்திரத்தை நான் என்னுடைய ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள நேரலாம் எல்லாம் உணர்வு வயமாகும் போது.

இப்போது அவர் அரசியலுக்கு வருகிறார் எனும் போது அவர் என்ன செய்வார் என்ற அறிவு தேவைபடுவதில்லை. எனக்கு பிடித்த ஒருவர் வெற்றிப் பெற வேண்டுமென்பது என்னுடைய விருப்பமாகிப் போனது. நான் சொன்னால் கேட்போர் உண்டெனில் நானும் அவருக்காக அரசியலுக்கு செல்லாமலேயே கட்சிக்கு அல்லது ஓட்டுக்கு ஆள் சேர்க்க கூடும். படித்த ஒருவர் நன்கு அரசியல் அறிந்தவர் என்னிடம் எத்தனை உயர்ந்த அரசியல் தெளிவு பற்றி விளக்கம் கூறினாலும் என்னால் அவரை விட்டுக் கொடுக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் அவர் என் உறவுகளை விட நான் நேசிக்கும் மனிதராக மாறியிருப்பார் சந்திக்கமாலயே.

இப்படியே எனக்கு உருவாகிய விருப்பம் போல இன்னொருவருக்கு வெறுப்பு வந்திருக்கலாம் ! இது இவருக்குள்ள வேற்றுமை இப்படியே பல ஆயிரம் மக்களில் இருவராக பிரியும் போது குழுவாகிறது. இப்படி சேரும் கூட்டம் தான் அனைவருக்கும் இன்னமும் சிலர் ஏதோ மாற்றம் வேண்டும் அல்லது ஒரு சுவாரஸ்யம் வேண்டுமென்ற நிலையிலும் புதிதாக ஒருவரை ஆதரிக்கலாம். 

கொள்கைகள் எல்லாம் யாரும் கேட்பது இல்லை தேவை என்னவோ மாற்றம் மட்டுமே. மக்கள் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் விரும்பிய ஒருவரை கொண்டாடுகிறார்கள். இது மக்கள் இரத்தத்தில் ஊறி விட்டது. 

அப்துல் கலாம் ஐயாவை பிடிக்காதவர்கள் உண்டு என்று கூறுவது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை ஏன் காமராஜரை பிடிக்கத்வர்கள் உண்டு. இப்படி அனைவரையும் அனைவரும் விரும்புவதும் இல்லை, வெறுப்பதும் இல்லை.

இந்த நிலைப்பாடு தான் மக்களுக்கு அறிமுகமான பெரிய பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் செய்வதற்கான முதன்மை காரணம். ஹார்பிக் விளம்பரம் செய்த பிரபாஸ் வாய்ப்பு இழந்த போதும் பலர் மனதில் நீங்காமல் இருந்தார் அதே வேளையில் ஹார்பிக் விளம்பரமும், வியாபாரமும் படு ஜோராக நடந்தது.

இவ்வளவு தான் மக்கள் "மக்களாகிய நாங்கள் அனைவரையும் எழிதில் நம்பிவிடுவோம்." அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற ஆழ்ந்த தெளிவிர்க்குள் செல்ல நேரமும் இல்லை தேவையுமில்லை. 

தொலைக்காட்சி "நீயா நானா" என்ற நிகழ்ச்சியில் எப்போதும் இரு தரப்பு வாதங்கள் உண்டு வாதிடுபவர்களும் உண்டு என்றாலும் சில நிகழ்சிகளில் இடைவேளை க்கு பிறகு இவ்வளவு நேரம் நடந்த விவாதத்தில் எதிர் தரப்பு பக்கம் நியாம் உண்டு நான் அங்கு சென்று அமர்ந்து கொள்கிறேன் என்று சென்றவர்கள் பலர் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஒருவர் மனம் மாற சில வினாடிகள் போதும் 

தேர்த்தல் நேரத்தில் கடைசி நாட்களில் தங்கள் சாமர்த்தியமான பேச்சால் ஆட்சி பிடித்தவர்கள் ஏராளம். 

விஜய் நேற்று பேசியது ஓர் அனல் பேச்சு என்று யாராலும் மறுக்க முடியாது! விஜய் நேரடியாக ஆழும் கட்சியை எதிர்ப்பார் என்று யாரும் நினைக்கவில்லை இனி வரும் காலங்கள் இரு தரப்பு உறுப்பினர்களும் கார சாரமான பல வாக்கு வாதங்களில் ஈடுபடலாம். அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களுக்கா இவர்கள் அடித்துக் கொள்வார்கள். இந்த இடத்தில் பல பேர் மன மாற்றம் அடையலாம். உறுப்பினர்கள் இடம் பெயரலாம்.

பல பெரிய பொறுப்புகள் கொடுத்து பணமும் கொடுத்து தன் கட்சிக்கு இழுக்கலாம் இப்படி இனி வரும் தேர்தல் நாள் வரை அரசியல் பல நிகழ்வுகளை நடத்தும் என்றாலும் மக்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும். 

விஜய் பேசிய உணர்வு பூர்வமான பேச்சுக்கள் அனைவர் மனதில் புல்லரிக்க செய்து விட்டன. சினிமா அனைவர் வாழ்விலும் கலந்தது என்று கூறியவர் அதில் ஒழுக்கமாக கடைசி நான்கைந்து படங்களில் நடித்திருக்கலாம் என்பது அனைவர் எண்ணமுமாக இருக்கலாம். 

அடுத்த அடுத்த அரசியல் களம் காண பலரும் ஆர்வமாக இருப்பார்கள். செய்தி சேனல்கள் விஜகாந்திர்க்கு செய்தது போல முயற்சிக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. 

"இருக்க வீடு, பசிக்கு சோறு, அதுக்கு ஒரு வேலை" இவ்வளவும் கொடுக்காத அரசு இருந்தா என்ன இல்லன்னைன்னா என்ன செமையான கேள்வி"

"மீன் பிடிக்க தெரிந்தவன் பிடிக்கட்டும் தெரியாதவனுக்கு நாம பிடிச்சிக் கொடுப்போம்" என்ற நிலைப்பாடு பாராட்டுக் குரியது.

வாழ்த்துகள்.




   

Comments

  1. Movieku block money vankuvaru, import car ku tax katta mataru, pondati pasankala vittu nadigai kuda iruparu. Ana makkal mattum nermaia irundu ivara CM akanum. Nee first olunka irunda vennai

    ReplyDelete
    Replies
    1. தனிப்பட்ட வாழ்கையில உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காட்டியது ரொம்ப குறைவான அரசியல் வாதிகள் தான்! நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதேன்னு சொல்ல காரணமும் அதுதான். பல துர்திஸ்ட்ட சம்பவங்கள் தான் நம்மை வேறு பாதை நோக்கி பயணிக்கச் செய்யும். இனி வரும் காலங்கள் எப்படியென்று பார்க்கலாம்

      Delete

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...