Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

இருள் சூழ்ந்தவன்

 


அடிச்சி அவன் மண்டைய உடைக்காமல் நான் இங்கிருந்து வர மாட்டன் தாயோளி இன்னைக்கு அவனா நானான்னு பாக்கணும் ல மக்கா. என்ற இளமை பருவ வீரத்துடன் நின்றிருந்தான் தினேஷ் பத்து வருடங்களுக்கு முன்பு. வீரம், அந்த வீரத்துடன் பேசிய வார்த்தைகள் எல்லாம் பருவ மாற்றங்கள் போல மாறிக் கொண்டே இருந்தன. 

வார்த்தைகள் ஊற்றுப் போல பெருகிக் கொண்டே இருந்தன நரம்புகளின் இறுக்கம் குறைந்து விட்டது ஊரெங்கும் வம்பை விலைக்கு வாங்கியவன் என்று சமாதான படுத்திக் கொண்டிருக்கிறான் அனைவரையும். திருமணம் முடிந்தது, குழந்தை பிறந்தது என்ற தனிப்பட்ட வாழ்க்கை ஏற்படுத்திய மாறுதல்களாக கூட இருக்கலாம். 

வீரர்களை எல்லாம் திருமணம் கோழையாக மாற்றி விட்டது என்று கூறி விட முடியாது ஏனென்றால் வீரன் என்றும் வீரன் தான். ஆனால் அவன் இப்போது பொறுப்புள்ளவனாக முன் பின் நடப்பதை புரிந்து கொண்டவனாக இருக்கலாம். தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்தவனாக இருக்கலாம். 

யார் எப்படி இருந்தாலும் அனைவரும் அடுத்த அடுத்த வளர்ச்சியில் சோதிக்கப் படுவார்கள் என்பது போலவே, தினேஷ் இன்று நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கிறான்.

உடலுள் வலு இல்லாமல் இல்லை ஆனால் ஏனோ மனம் சோர்ந்து விட்டது. யாரிடம் வாக்கு வாதம் செய்யவோ அல்லது சண்டையிடும் மனநிலையோ இல்லாமல் போனது. இன்னமும் இரண்டு அடி கூட அடித்து விட்டு போகட்டும் என்ற மனநிலைக்கு அவன் என்றோ வந்து விட்டான். 

“தீபாவளி பண்டிகை” வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பியவர்கள் ஏராளம். ஊருக்கு வந்த நண்பர்கள் பண்டிகையை கொண்டாட காலை கோவிலுக்கு சென்று வீடு வந்து மனைவி குழந்தைகளை விட்டு விட்டு கறி கட்சிக்கு சென்று தேவையானதை வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று கடற்கரையோ அல்லது அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று மது விருந்து கொண்டாடுவது தான் வழக்கம். 

வருடம் வருடம் இதுவோ தொடர்கதை. மதுவின் உச்சம் அதன் பின் என்ன நடக்கிறது என்ற சுயநினைவு அற்ற நிலை. தினேஷின் நண்பன் எதிர் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவனை அடித்து விட்டான் அவர்கள் சூழ்ந்து கொள்ள. என்ன இது தேவையற்ற சண்டை என்று நண்பர்கள் அனைவரும் தடுக்க முயற்சிக்க யாரோ ஒருவர் வீசிய கால் தினேஷின் நெற்றியில் பட்டு பொழ பொழ வென்று ரத்தம் அடுத்த இரண்டு வினாடிகளில் சண்டை முடிவிற்கு வந்துவிட்டது. 

அப்படியொரு சண்டை நிகழ ஒரே ஒரு காரணம் போதை, ரத்தம் கொட்ட கொட்ட தினேஷ் விலகி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான். யார் மீது வருத்தம் கொள்ள சும்மா சென்றவர்களை அடித்து சண்டையை துவங்கிய நண்பனிடமா! இல்லை கல் கொண்டு வீசியவனையா!

யாரிடமும் கோபப்பட்டோ, வருத்தம் கொண்டோ இனி என்ன ஆகப் போகிறது சரி ஆனது ஆகட்டும் இது இத்தோடு முடியட்டும் என்ற நினைப்பிலேயே. அவன் அமைதியாக வே நின்றிருந்தான். அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அக்கறை கொண்ட நட்புகள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். வீட்டில் அவனுக்காக காத்திருந்த உறவுகள் நெஞ்சம் நேரமாக நேரமாக பதை பதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக நள்ளிரவு வீடு சென்றவனுக்கு யாரை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கோபமாக திட்டி விட்டு யாரும் அவனிடம் நெருங்க முடியாத அளவு கோபத்தைக் காட்டி விட்டு சென்று விட்டான் அவனது அறை நோக்கி 

ஒரு சாதாரண பிரச்சினைப் போல தெரிந்தாலும் அவனது குடும்ப சூழ்நிலை யை நினைத்தும் மது அருந்தியது நினைத்தும் அவன் நிச்சயம் வருத்தம் மட்டுமே கொண்டிருந்தான் வேலையிலும் ஒரு நிலைப்பு இல்லாத ஒரு சூழல் நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் மனதில் உருவாக்கிக் கொண்டு வாழ்வை நகர்த்திச் சென்றான். 

அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க வழி வேண்டும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்க வழி யென்ன என்று சிந்திக்க தோன்றியது 

ஒட்டு மொத்த பிரச்சனைகளும் ஒருவனை சூழ வேண்டுமென்றால் ஏதோ ஒரு பெரும் தவறு எங்கோ நடந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறியாமல் அதற்கான தீர்வை காண முடியாது. இன்றில்லாமல் என்றோ ஒரு நாள் நாம் ஏதோ தவறு செய்திருக்கலாம் அதன் விளைவு இன்றாக கூட இருக்கலாம் அல்லவா! 

என்று அவன் நினைத்திருந்தான். இனியும் நினைப்பான் தீர்வு கிடைக்கும் வரை….

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...