அகப்பட்டுக் கொண்ட பேருந்து நெரிசல், வாழ்வின் அடுத்தது என்ன என்று தெரியாத ஒரு விரக்தியான நிலை, நிம்மதி தராத வீடு, உறவுகள் மத்தியில் மவுனம் என அனைத்திற்கும் காரணம் உண்டு. அன்பின் ஓரவஞ்சனையை பார்த்திருக்கிறேன், கடும் சொற்கள் வீசி புன்னகைத்து செல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்னும் அடிமையாகவே வாழ துணிந்தவனுக்கு எதற்கு வாழ்வு ? என்ற கேள்வியுடன் கடந்து செல்கிறேன். வாழ்வு என்பது சாபமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது வரம் கிடைத்த வரத்தினால் சாபத்தை சரி செய்ய முயலுவதே இன்பம் அதனை தவிர வேறு ஏதும் இன்பமில்லை என்ற நிலைப் பாடு தான் என்னுடையது. படாத அவமானங்கள் இல்லை. பட்டும் திருந்தவில்லை என்றான பின் என்ன செய்வது. அப்படி என்னிடம் பல பேர் கூறியுள்ளனர் இப்போது நானும் பலரை பார்த்து கூறுகிறேன் இருந்தும் என்னையும் இன்னமும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை அனுபவங்களுக்கு பின்னும் நான் திருந்த வில்லையோ! இல்லையென்றால் இவ்வளவு தான பார்த்துக்கலாம் என்ற எண்ணமாக இருக்க முடியாது. சலிப்பின்றி தினமும் காவல் நிலையம் சென்று ஏதாவது வழக்கு என்மீது போடுங்க...
பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அரு...
உண்மையில் இப்படித் தான் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை தெளிவு அனைத்துப் பெண்களுக்கும் வேண்டும் என்பது தான் நமது எண்ணம். உண்மையோ அல்லது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் முகம் மாற்றம் செய்த வீடியோவோ தெரியவில்லை என்ற போதும். ஒரு பிரபலமான பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியே வந்துள்ளது என்பது அனைவரும் அதனை பார்க்க புள்ளி வைக்காத இடமே இல்லை. எத்தனையோ ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ள மனிதர்கள் இன்னமும் சிறிதும் ஆர்வம் குறையாமல் உள்ளனர். அப்படி என்ன புதுமையை பார்த்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனோ ஏதோ ஒன்று அவர்களை அப்படி தூண்டியிருக்கலாம். சரி அனைவரும் தேடி, தேடி பார்த்ததின் பயன் என்ன யாருக்கு என்ன கிடைத்தது ? வக்ரம் இல்லாதவர்கள் யார் ? என்ற கேள்வியும் எழுகிறது. பெண்களும் இதனை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு இருந்தது இன்னமும் ஆச்சர்யம். ஆணை மட்டுமே தவறாக சித்தரிக்கும் உலகம் அவர்களை என்ன சொல்லும்! ஆண், பெண் சரி சமம் என்று கூறும் காலம் இது என்பதனால் இந்த நிலையா ? உண்மை தான் எனலாம் சமீபத்தில் இஃது போல் நடந்த ஒரு ஆணின் சுய இன்ப காணொளியும் இப்படியே அதிகமாக பெண்களால் பரப்ப பட்டது. ...
2 Comments
👍
ReplyDeleteThanks for your support & interest
ReplyDeleteநன்றி